டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சர்ச்சை இயக்குநர் ராம்கோபால் வர்மா தற்போது பல படங்களில் பிசியாக தன்னை ஈடுபடுத்தி வருகின்றார். 365 டேய்ஸ் படத்திற்கு பின்னர் மோகலி பூவு என்ற படத்தை இயக்கி வரும் ராம்கோபால் வர்மா, தற்போது இப்படத்தின் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளார். சச்சின்ஜோஷி மீரா சோப்ரா, கைனாட் அரோரா உட்பட பலர் நடிக்கும் இப்படம் சைக்கோ மற்றும் திகில் கதைக் களத்தில் உருவாகியுள்ளது. இப்படத்திற்காக சச்சின் ஜோஷி மற்றும் மீரா சோப்ரா பங்கேற்ற டூயட் பாடலை போலாந்த் நாட்டில் ராம்கோபால் வர்மா படமாகியுள்ளார். 1999 ஆம் ஆண்டு ராம்கோபால் வர்மா இயக்கிய மஸ்ட் படத்திற்காக வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்தினார். அதன் பின்னர் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்துவதை தவிர்த்து வந்த ராம்கோபால் வர்மா தற்போது 16 வருடங்களுக்கு பின்னர் மோகலி பூவு படத்திற்காக தனது முடிவை மாற்றி மீண்டும் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்தியுள்ளார். இது டோலிவுட் வட்டராத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.