ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
நடிகை சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்தவர் டைரக்டர் செல்வராகவன். தனுஷ் நாயகனாக நடித்த காதல் கொண்டேன் படத்தை இயக்கிய செல்வராகவன், அந்த படத்தில் நாயகியாக அறிமுகமான சோனியா அகர்வாலை காதலித்தார். இந்த காதல் கனிந்து கசிந்துருகி கல்யாணத்தில் முடிந்தது. திருமணத்துக்கு பின்னர் சோனியா சினிமாவில் நடிப்பதை தவிர்த்தார். காலப்போக்கில் சோனியா அர்வாலுக்கும், செல்வராகவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பரஸ்பர விவாகரத்து செய்து கொண்டனர். இந்த பிரிதலுக்கு காரணம் நடிகை ஆண்ட்ரியா என்று கூறப்பட்டது. செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நாயகியரில் ஒருவரான ஆண்ட்ரியாவுடன் செல்வராகவன் நெருங்கி பழகியதாகவும், அது சோனியாவுக்கு பிடிக்காததால் சண்டை போட்டு பிரிந்து விட்டதாகவும் அப்போது தகவல்கள் வெளியாயின.
தற்போது இரண்டாம் உலகம் என்ற படத்தை தனுஷ் மற்றும் ஆண்ட்ரியாவை வைத்து இயக்கி வரும் செல்வராகவன் மீண்டும் காதலில் விழுந்து விட்டாராம். அந்த படத்தில் செல்வாவுக்கு அசிஸ்டண்ட்டாக பணிபுரியும் கீதாஞ்சலி என்பவரைத்தான் செல்வராகவன் காதலிக்கிறார். இதனை வெளிப்படையாகவே தெரிவித்திருக்கும் செல்வராகவன், கீதாஞ்சலி மிகவும் அன்பானவர் என்றும், எனது உணர்வுகளை புரி்நது கொண்ட உண்மையான காதலி என்றும் கூறியிருக்கிறார். செல்வராகவன் தனது புதுக் காதலியை வருகிற ஜூன் மாதம் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.