இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
முரளி நடித்த பூமணி படத்தை இயக்கியவர் மு.களஞ்சியம். அதையடுத்து கிழக்கும் மேற்கும், பூந்தோட்டம், நிலவே முகம் காட்டு, மிட்டா மிராசு ஆகிய படங்களை இயக்கினார். ஆனால் பின்னர் ஒரு பத்து ஆண்டுகளாக காணாமல் போனவர் மீண்டும் கருங்காலி என்ற படம் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். அந்த படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்தார்.
அப்படத்தில் அஞ்சலி நாயகியாக நடித்திருந்தார். அதையடுத்தும் அதே அஞ்சலியை நாயகியாக வைத்து, ஊர் சுற்றி புராணம் என்ற படத்தை தொடங்கினார் களஞ்சியம். அப்படத்தில் அஞ்சலி ஒப்பந்தம் செய்யப்பட்டு 12 நாட்கள் நடித்த நிலையில், அஞ்சலிக்கும் அவரது சித்திக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டு, சென்னையை காலி பண்ணிவிட்டு ஆந்திராவுக்கு சென்றார் அஞ்சலி.
அதோடு, தங்கள் குடும்ப பிரச்சினைக்கு களஞ்சியமும் காரணம் என்று சொல்லிக்கொண்டு அவரது ஊர் சுற்றி புராணம் படத்தில் தொடர்ந்து நடிக்க மாட்டேன் என்றும் கூறினார் அஞ்சலி. அதையடுத்து சினிமா சங்கங்களுக்கு கடிதம் கொடுத்து அஞ்சலியை தனது படத்தில் நடிக்க வைக்குமாறு கேட்டுக்கொண்டார் களஞ்சியம். ஆனால் அஞ்சலியோ, எனக்கு அவர் முறையான அக்ரிமெண்டோ, சம்பளமோ பேசவில்லை என்று சொல்லி அப்படத்தில் இருந்து கழண்டு கொண்டார்.