பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
பிரபுதேவா, முரளி நடித்த 'அள்ளித் தந்த வானம்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விஜி. அந்தப் படத்தை ஸ்ரீதர் பிரசாத் என்ற பெயரில் இயக்கியிருந்தார். அதன்பின் நீண்ட ஒரு இடைவெளிக்குப் பிறகு பிரகாஷ்ராஜ், பிருத்விராஜ், கோபிகா நடித்த 'வெள்ளித் திரை' என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கிய 'உதயநானு தாரம்' என்ற மலையாளப் படத்தின் ரீமேக். அந்த ரோஷன் ஆன்ட்ரூஸ்தான் இப்போது ஜோதிகா நடித்துள்ள '36 வயதினிலே' படத்தின் இயக்குனர். அப்போதைய பழக்கத்தில், சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கியிருந்த விஜியை மீண்டும் '36 வயதினிலே' படம் மூலம் வசனகர்த்தாவாக்கியிருக்கிறார் ரோஷன்.
இப்போது விஜிக்கு '36 வயதினிலே' படத்தின் வசனம் மீண்டும் பாராட்டு மழையைப் பொழிய வைத்துக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்திற்கு முன்பாக விஜி வசனம் எழுதிய “பாலா, மாயாவி, அழகிய தீயே, பொன்னியின் செல்வன், மொழி, அழகிய தீயே, கௌரவம்” ஆகிய படங்களில் 'அழகிய தீயே, மொழி' ஆகிய படங்கள் அதிக பாராட்டைப் பெற்றன. அதைப் போன்று இப்போது '36 வயதினிலே' படமும் பாராட்டப்படுகிறது. அடுத்து ஒரு புதிய படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தன் இயக்கத்தில் வெளிவந்த முதலிரண்டு படங்களின் தோல்வியை சரிக்கட்டும் விதத்தில் இந்தப் புதிய படத்தை இயக்கப் போகிறாராம்.