‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மிகப்பெரிய ஸ்டார்களை வைத்து படம் இயக்குபவர்கள் 24 மணி நேரமும் அந்த சிந்தனையிலேயே தான் இருப்பார்கள். அவர்கள் அந்த படத்தை முடிக்கும் வரையில் அடுத்த படத்தை பற்றி சிந்திக்கக்கூட மாட்டார்கள். ஆனால் இதற்கு விதி விலக்காக பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் இருக்கிறார். அவர் தற்போது மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படத்தை இயக்குகிறார். இந்நிலையில் தான் அவர் தனது அடுத்த படத்தை பற்றி பேசி இருக்கிறார். அதாவது அவரும், பிரின்ஸ் மகேஷ் பாபுவும் இணையப்போகிறார்களாம். அந்த புதிய படத்திற்கு பிரபல இளம் இசை அமைப்பாளரான ஜிப்ரான் இசை அமைக்கிறாராம். அவர் தொடர்ந்து உலக நாயகன் கமல் ஹாசனின் படங்களுக்கு இசை அமைத்து வருவது நினைவிருக்கலாம். இந்த படம் வரும் 2016ம் ஆண்டின் முதல் பகுதியில் தொடங்கும்.இந்த ஆண்டு இறுதியில் மகேஷ் பாபு தனது பிரம்மோத்சவத்தை முடித்து விடுவார் என்று தெரிகிறது. அவர் ஏற்கனவே நடித்து முடித்து விட்ட ஸ்ரீமந்துடு விரைவில் ரிலீசாகின்றது. இயக்குனர் பூரி ஜெகன்நாத்தும் மெகா ஸ்டாரின் ஆட்டோ ஜானி படத்தை முடித்து வரும் 2016ம் ஆண்டு சங்கராந்தியில் வெளியிடுகிறார். அதற்கு பிறகு அவர் பிரின்சுடன் இணைந்து புதிய படத்தை தொடங்குவார் என்று தெரிகிறது.