பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
என்னமோ ஏதோ, தலைவன் படங்களில் நடித்த நிகிஷா பட்டேல் தற்போது கரையோரம், நாரதன் படங்களில் நடித்து வருகிறார். என்னமோ ஏதோவில் ராகுல் ப்ரீத்தி சிங்கும் நடித்தார், கரையோரத்தில் இனியாவும் நடித்துக் கொண்டிருக்கிறார், நாரதனில் ஸ்ருதி ராமகிருஷ்ணனும் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் எத்தனை பேர் நடித்தாலும் நான்தான் படத்தின் ஹீரோயின் என்கிறார் நிகிஷா பட்டேல்.
அவர் கூறியதாவது: நான் எப்போதுமே இரண்டாவது ஹீரோயினாக நடிக்க மாட்டேன். அதில் எனக்கு விரும்பம் இல்லை. தேவையில்லாத ஈகோ பிரச்சினைகள் வரும். என்னமோ ஏதோ இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட் என்பதால் நடித்தேன். கரையோரம் படத்தில் இனியாவும், நாரதனில் ஸ்ருதி ராமகிருஷ்ணனும் சிறிய கேரக்டரில்தான் நடிக்கிறார்கள். படத்தின் ஹீரோயின் நான்தான்.