ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
ரஜினி நடித்து வெளிவந்த லிங்கா படத்திற்கு நஷ்டஈடு வழங்கும் விவகாரத்தில் லிங்கா விநியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணுவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவுகிறது.
கலைப்புலி தாணு மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன் வைத்து லிங்கா பட விநியோகஸ்தர் சிங்காரவேலன் வெளியிட்டுள்ள அறிக்கையின் சுருக்கம் வருமாறு: லிங்கா வெளியீட்டின் மூலம் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பு 37.5 கோடி ரூபாய் ஆகும். இழப்பீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் சுமுகமான உடன்பாடு ஏற்பட்டு, டெபாசிட் அடிப்படையில் படம் திரையிட்டவர்களுக்கு கொடுப்பதற்காக 12.5 கோடியும், ரஜினிகாந்த் படம் நடித்து தருவார் என்றும் உறுதி கூறியதால் ஒத்து கொண்டு பணத்தை பெற்றுக் கொள்வது என முடிவெடுத்தேன். அதன் அடிப்படையில் மார்ச் 20ம் தேதி அந்த பணம் தங்கள் வசம் வந்துவிட்டதாக கலைப்புலி தாணு மீடியாவிலும் தெரிவித்தார். அன்று இரவே விநியோகஸ்தர்கள் சிலருக்கு முன்பணமாக தலா ரூபாய் 35 லட்சம் தருவதாக உறுதி கூறப்பட்டு அவ்வாறு கொடுக்கப்பட்டது. ஆனால் எஞ்சிய தொகை பல நாட்களுக்கு பிறகு, மிகுந்த அழுத்தத்திற்கு பின்னர் வழங்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் அந்த தொகை எங்கு சென்றது என்பதை தாணு விளக்க வேண்டும்
4 ஏரியாக்களுக்கு மட்டும் பணத்தை கொடுத்துவிட்டு மீதி ஏரியாக்களுக்கு பொய்யான காரணம் கூறி பணம் கொடுப்பதை இழுத்தடிப்பது ஏன் என்பதையும் தெளிவுப்படுத்த வேண்டும். திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் இணைந்து வந்து பணத்தை பெற வேண்டும் என்று கூறும் தாணு, 4 ஏரியாக்களுக்கு பணம் கொடுத்தபோது அந்த விதியை பின்பற்றாதது ஏன் என்பதை தெரிவிக்க வேண்டும்.
சினிமாவில் ஜொலித்துவிட்டு பின்னர் நலிந்து போனவர்களை தேடிப்பிடித்து அவர்களுக்காக ஒரு படம் நடித்து அவர்களை வளப்படுத்திய ரஜினி, அவர் படத்தை வெளியிட்டு நஷ்டமடைந்த எங்களுக்கு உதவாமல் இருப்பாரா என்ன?