அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தில் நடித்த சர்வானந்த் - நித்யாமேனன் ஜோடி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடித்துள்ளனர். படத்தின் பெயர் - நீ நான் நாம். முன்னாள் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைத்தலைவர் சி.கல்யாண் தமிழ தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாரித்துள்ள இந்தப் படத்தில் 18 வயது இளம்பெண்ணின் அம்மாவாக நடித்திருக்கிறார் நித்யா மேனன். ஓ காதல் கண்மணி படத்தில் திருமணம் செய்து கொள்ளாமலே ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் பெண்ணாக நடித்த நித்யா மேனன் இந்தப்படத்தில் அதற்கு நேர்மாறான வேடத்தில் நடித்திருக்கிறார்.
அதாவது, திருமண உறவின் புனிதத்தை உணர்ந்து... திருமணத்தை வலியுறுத்துகிற பெண்ணாக நடிக்கிறார் நித்யா மேனன். திருமணம் வேண்டாம் என்று சொல்கிற தன்னுடைய 18 வயசு மகளுக்கு திருமணம் என்பது எவ்வளவு அவசியமானது என்பதை தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் வழியே நித்யாமேனன்எடுத்துச் சொல்வது போல் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்திற்காக ஓல்டுகெட்டப்பில் நடித்தபோது, அந்த போட்டோக்களை மீடியாக்களிடம் வெளியிடக்கூடாது என்று கண்டிஷன் போட்டுத்தான் அம்மா கேரக்டரில் நடிக்கவே ஒப்புக்கொண்டாராம் நித்யா மேனன்.