தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு விரைவில் தேர்தல் வர இருக்கிறது. இதையொட்டி நடிகர் விஷால், ஊர் ஊராக சென்று நாடக நடிகர்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார். தற்போதையை தலைவர் சரத்குமார் மீது அவர் சரமாரி குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இந்த நிலையில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவது குறித்து நடிகர் விஷால் தவறான கருத்துக்களை கூறிவருகிறார். புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பான முடிவுகளை சங்கத்தின் செயற்குழு, பொதுக்குழு தான் முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து எழுந்த சந்தேகங்களுக்கு விஷால் கலந்து கொண்ட செயற்குழுவிலேயே விளக்கம் அளிக்கப்பட்டது. கட்டிட பணிகள் தொடங்காததற்கு காரணம் பூச்சி முருகன் தொடர்ந்த வழக்குதான் என்பது விஷால் உள்ளிட்ட உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். சங்கத்திற்கு உடனடியாக கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்கிற விஷாலின் ஆர்வத்தை வரவேற்கிறேன்.
சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவது விஷாலின் ஆசையாக இருக்கலாம். அது எங்களின் லட்சியம். கட்டிடம் கட்ட பொதுக்குழுவில் போடப்பட்ட ஒப்பந்தத்தை கைதட்டி வரவேற்றவர்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வழக்கு போடுகிறார்கள். அவர்களுடன் இணைந்து விஷால் செயல்படுகிறார். சங்கத்தில் ஏதோ பிரச்சினை இருப்பது போல அவ்வப்போது பேட்டி கொடுத்து வருகிறார். உண்மைக்கு புறம்பாக பேசி வருகிறார். இது வேதனை அளிப்பதாக உள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஒற்றுமையை உறுதிப்படுத்த இனியாவது விஷால் இத்தகைய செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.