'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சினிமாவில் விதவிதமான கதைகள் படமாக வருகின்றன. நாட்டு நடப்புகளையும், சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விஷயங்களையும் பற்றி கூட பல படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் இயற்கையை பாதுகாக்கவேண்டும் என்கிற நோக்கில் படங்கள் எதுவும் வருகிறதா என பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தட்டுப்படவே இல்லை. மிஞ்சிப்போனால் அதைப்பற்றி டாக்குமென்ட்ரியோ அல்லது குறும்படமோ எடுத்து, அத்துடன் திருப்திப்பட்டுக்கொள்கிறார்கள்.
பேராண்மை, புறம்போக்கு போன்ற படங்களில் கூட இயற்கையை பாதுகாக்க வேண்டும் என லேசுபாசாகத்தான் சொல்லியிருப்பார் இயக்குனர் ஜனநாதன். ஆனால் மலையாளத்தில் முழுக்க முழுக்க இயற்கையை காக்கவேண்டியதன் அவசியத்தை பற்றி படம் ஒன்றை இயக்கப்போகிறார் இயக்குனர் அனில் ராதாகிருஷ்ணன் மேனன். உடனே இவரை ஏதோ கலைப்படம் எடுக்கிறவர் என்கிற லிஸ்ட்டில் சேர்த்துவிடவேண்டாம்.
பிருத்விராஜை ஹீரோவாக வைத்து, ஆறு கைதிகள் ஒன்று கூடி கொள்ளையடிக்க திட்டமிடும் 'சப்தமஸ்ரீ தஸ்கரா' போன்ற கமர்ஷியல் படங்களை இயக்கியவர்தான் இந்த அனில். தற்போது மலையாளத்தில் பரத்தை வைத்து 'லார்ட் லிவிங்க்ஸ்டன் 7௦௦௦ கண்டி' என்கிற படத்தை இயக்கிவரும் இவர், அதை முடித்த கையோடு இயற்கையை பற்றிய சப்ஜெக்ட்டை கையில் எடுக்க இருக்கிறாராம்.