'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் 'மாஸ்' படம் நாளை உலகமெங்கும் வெளியாகிறது. உலகம் முழுக்க சுமார் 1000 தியேட்டர்களில் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் 450 திரையரங்குகளுக்கும் மேல் ரிலீஸாகவிருக்கிறது. மாஸ் படத்தின் முன்பதிவுகள் தொடங்கி தற்போது பரபரப்பாக போய்க் கொண்டிருக்கின்றன. லேட்டஸ்ட் தகவலின்படி தமிழகம் முழுக்க 3 நாட்கள் ஹவுஸ்ஃபுல் என்ற தகவல் அடிபடுகிறது.
இதற்கிடையில் மாஸ் படத்தில் ஹீரோ சூர்யாவின் கேரக்டர் குறித்து வெங்கட் பிரபுட்விட்டரில் புதிய தகவல் ஒன்றை பதிவு செய்திருக்கிறார். அதாவது 'மாஸ்' படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும், அதில் ஒரு வேடம் ஈழத்தமிழர் என்றும் வெங்கட்பிரபு கூறியிருக்கிறார். அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்பதை மட்டும் அவர் சொல்லவில்லை. சில தினங்களுக்கு முன் நடைபெற்ற மாஸ் பிரஸ்மீட்டில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிப்பதைப் பற்றி கேட்டபோது, இந்த செய்தி ரசிகர்களுக்கு கடைசிநேர சர்ப்ரைஸாக இருக்கட்டுமே என்றார் சூர்யா. தற்போது ட்விட்டரில் அந்த சஸ்பென்ஸை உடைத்துவிட்டார் வெங்கட்பிரபு.