டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'சூது கவ்வும்' படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்தவர் சஞ்சிதா ஷெட்டி. தொடர்ந்து பீட்சா படத்தின் இரண்டாம் பாகமாக தயாரிக்கப்பட்ட 'வில்லா' படத்தில் நடித்தார். இப்படத்திற்குப் பிறகு சஞ்சிதாஷெட்டிக்கு தமிழில் படங்கள் இல்லை. சென்னையில் ஹோட்டலில் தங்கி வாய்ப்பு தேடுவது இயலாத காரியம் என்பதால் பெங்களுருவுக்கு திரும்பிச் சென்றுவிட்டார். தற்போது 'என்னோடு விளையாடு' என்ற படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததும் மீண்டும் சென்னை வந்து அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அருண் கிருஷ்ணசாமி என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இப்படத்தில் பரத் ஹீரோவாக நடிக்கிறார். பரத், சஞ்சிதா ஷெட்டி உடன், 'மதயானைக்கூட்டம்' கதிர், சாந்தினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படத்திற்காக சமீபத்தில் சஞ்சிதா ஷெட்டியின் பாடல் ஒன்று படமாக்கப்பட்டது. பாழடைந்த பங்களா ஒன்றில் எலிகள் அங்குமிங்கும் ஓட அதற்கு நடுவே சஞ்சிதா நடனம் ஆட வேண்டும் என்று சொன்னாராம் இயக்குநர். இந்தக் காட்சிகள் படமாக்கப்பட்டபோது எலிகளைப் பார்த்து முதலில் மிரண்டுபோன சஞ்சிதா நடிக்க மறுத்திருக்கிறார். பிறகு அரைமனதோடு நடனம் ஆடி இருக்கிறார்.
நடிகைகள் பாவம்தான்...!