டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தெலுங்குப்பட அதிபர் சி.கல்யாண் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவராக இருந்தபோது சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு தமிழக அரசு நிதி உதவி வழங்கியது. தன் பதவிக்காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சினிமா நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா செய்த உதவியை எண்ணி புளகாங்கிதப்பட்டார் அப்போது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவராக இருந்தார் சி.கல்யாண்.
தற்போது அவர் சர்வானந்த், நித்யா மேனன் நடிப்பில் நீ நான் நாம் என்ற படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் துவக்கத்தில் ஜெயலலிதா அரசின் நான்கு ஆண்டு சாதனைகளை விளக்கும் காட்சிகள் அடங்கிய ஒரு செய்திப் படத்தை இணைத்திருக்கிறார். அதில் ஜெயலலிதாவை முதல்வராகவே சித்தரித்திருக்கிறார். இதில் ஆச்சர்யமான விஷயம்... பெங்களுருவில் நடைபெற்ற சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே, ஜெயலலிதா அரசின் நான்கு ஆண்டு சாதனைகள் அடங்கிய செய்திப்படத்துடன் கூடிய நீ நான் நாம் படத்துக்கு சென்சார் சர்ட்டிஃபிகேட் வாங்கிவிட்டார் கல்யாண்.
ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்றதை முன்னிட்டு, எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைப்பில் வருகிறார் அம்மா வருகிறார் என்ற பாடல் தயார் செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் பர்சனல் செக்யூரிட்டி ஆபிசர்களில் ஒருவரான கருப்பசாமி என்பவர் இந்தப்பாடலை எழுதினாராம். இந்தப் பாடலை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தயார் செய்து கொடுத்ததாம். பின்னணியில் இருந்து இந்த பாடல் உருவாகவும் கல்யாண்தான் காரணமாம். இவரைப் பார்த்து இன்னும் எத்தனை நிர்வாகிகள் அம்மாவுக்கு காவடி எடுக்கப்போறாங்கன்னு தெரியலையே...!