ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
காதல் கவிதைகள் மூலம் புகழ்பெற்றவர் எழுத்தாளர் சுகா. அவரின் கவிதைகளில் மயங்கி அவரை இயக்குனர் ஆக்கினார் நடிகர் ஆர்யா. அவரது தம்பி சத்யா நடிக்க படித்துறை என்ற படத்தை தயாரித்தார். சாந்தினி ஹீரோயினாக நடித்தார். அந்தப் படம் வெளிவரவில்லை. அதன்பிறகு சுகாவுக்கு வேறு வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கமல், கவுதமி நடித்து வரும் பாபநாசம் படத்தில் கமல் நெல்லை தமிழ் பேசி நடித்தார். அவருக்கு நெல்லை தமிழ் பயிற்சியாளராக பணியாற்றினார் சுகா. அது இருவருக்கும் நல்ல நட்பை ஏற்படுத்தியது.
அந்த நட்பின் அடிப்படையில் சுகாவை தூங்காவனம் படத்தின் வசனகர்த்தா ஆக்கிவிட்டார் கமல். தூங்காவனம் படத்தை கமலிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய செல்வா இயக்குகிறார், ஜிப்ரான் இசை அமைக்கிறார். கமல் ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.