அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மடிப்பாக்கம் மாதவன் என்ற சீரியலில் பல எபிசோடுகளில் ரவுடி, எமன், தாதா என பலதரப்பட்ட கெட்டப்புகளில் நடித்து நேயர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருபவர் டெலிபோன் ராஜ். சினிமாவிலும் ஏராளமான படங்களில் நடித்து வரும் இவர், வடிவேலுவுடன் மட்டும் 25 படங்கள் வரை நடித்திருக்கிறார். அதோடு, 1985ல் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கத் தொடங்கியவர், பல மெகா சீரியல்களிலும் நடித்து டிவி நேயர்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார்.
தனது கலைப்பயணத்தைப்பற்றி டெலிபோன் ராஜ் கூறுகையில், மெளலியின் பிளைட் நம்பர் ஒன் 72 என்ற சீரியலில் பையாலு என்ற கேரக்டரில்தான் நான் முதன்முதலில் நடித்தேன். 1985ல் நடித்த சீரியலே என்னை பெரிதாக பேச வைத்தது. அதனால் செவன்த் சேனல் நாராயணன் தயாரித்த மரியாதை ராமன், வாழ்க்கை, கள்வணின் காதலி, எத்தனை மனிதர்கள் என பல சீரியல்களில் நடித்தேன்.
அதன்பிறகு கே.பாக்யராஜ் இயக்கிய ஒரு கதையின் கதை தொடரில் நடித்தேன். அதில் என் நடிப்பைப்பார்த்து விட்டு, எங்கய்யா இவ்ளோ நாளும் போயிருந்தீரு. நீரெல்லாம் பெரிய நடிகராக வேண்டிய ஆளுய்யா என்றார். மேலும எனது நடிப்பைப்பார்த்து விட்டு அனைவரும் விழுந்து விழுந்து சிரித்ததாக சொல்லி பாராட்டினார். கே.பாக்யராஜின் பாராட்டு எனக்கு பெரிய உற்சாகத்தையும், எனது நடிப்பு மீது அதிகமான நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. அந்த சீரியலில் ஒரு 3 வருடம் நடித்தேன்.
அதன்பிறகு ஏவிஎம்மின் கீதாஞ்சலி சீரியலில் நடித்தேன். அது ஐந்து வருடம் ஒளிபரப்பானது. பின்னர் ஜி தமிழில் மசாலா குடும்பம் மற்றும் ராதிகாவின் செல்லமே தொடர்களில் நடித்தேன். அதன்பிறகு கீதாஞ்சலி சீரியலில் நான் நடித்துக்கொண்டிருந்தபோது வடிவேலு ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில் நடிக்க அழைத்தார். அப்போது என்னால் செல்ல முடியாதநிலை என்றபோதும், அந்த சீரியலின் டைரக்டரிடம் கேட்டு என்னை அழைத்து நடிக்க வைத்தார். இப்படி சீரியலில் தொடர்ச்சியாக நடித்ததால் சினிமாவில் நடிப்பதற்கு இடையூறுகள் ஏற்பட்டது. அதனால்தான் பின்னர் சீரியல்களை குறைத்துக்கொண்டு சினிமாவில் முழுக்கவனம் செலுத்தினேன்.
இந்த நேரத்தில்தான் கலைஞர் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு மடிப்பாக்கம் மாதவன் என்ற சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் ரவுடி, எமன், தெலுங்கு தாதா, என பல கெட்டப்புகளில் நடித்திருக்கிறேன். இன்னும் ஏராளமான கெட்டப்புகளில் நடிக்க இருக்கிறேன் என்றார்.
அவரிடத்தில், மடிப்பாக்கம் மாதவன் சீரியலுக்கு நேயர்களின் ரெஸ்பான்ஸ் எப்படி உள்ளது? என்று கேட்டபோது,
ஒருநாள் எலி படத்தின் டப்பிங் இரவு 10.30-ல் இருந்து 3 மணி வரை பேசி விட்டு டீ சாப்பிடுவதற்காக வெளியில் வந்தேன். அப்போது என்னை ஒரு போலீஸ்காரர் அழைத்தார். நடுரோட்டில் ராத்திரி 3 மணிக்கு இந்த ஆளு எதற்காக அலைகிறார்? என்று கேட்க அவர் அழைக்கிறார் என்று நினைத்து அவரிடம் சென்றேன். அவரோ, தலைவா மடிப்பாக்கம் மாதவனில் பின்னி பெடலெடுக்கிறீங்க -என்று எனது நடிப்பைப்பற்றி பெருமையாக சொன்னார். அதேமாதிரி இன்னொரு நாள் நோ பார்க்கிங் ஏரியாவில் பைக்கை விட்டு விட்டேன். அப்போது என்னை அழைத்த ஒரு போலீஸ், பைன் கேட்கப்போகிறார் என்று பார்த்தால், மடிப்பாக்கம் மாதவன் சீரியல்ல நல்ல நடிக்கிறீங்க. எப்படி இந்த மாதிரியெல்லாம் நடிக்கிறீங்க என்று ஒரே பாராட்டு.
அதேமாதிரி டி.ஆர். கார்டனில் சண்டமாருதம் படப்பிடிப்பு மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை 4 மணிக்குத்தான் முடிந்தது. அப்போது வண்டியில் வந்து கொண்டிருந்தபோது சென்னையிலுள்ள போரூர் சிக்னலில் ஒரு போலீஸ் என் பைக்கை மறித்து விட்டார். உடனே இந்த நேரத்துல எங்க போயிட்டு வர்றீங்க? என்று கேட்டார். நான் பதில் சொல்வதற்காக ஹெல்மெட்டை கழற்றினேன். என்னைப்பார்த்ததும் சிரித்து விட்டார். தலைவா நீங்களா? என்று என்னிடம் மென்மையாக விசாரித்தார்.
ஆக, மடிப்பாக்கம் மாதவன் சீரியலை குடும்பம் குடும்பமாய் பார்த்து ரசித்து விட்டு பாராட்டுவது ஒரு பக்கமிருக்க, காவல்துறையினரும் என்னை பாராட்டுகிறார்கள். அந்த வகையில், நான் நடித்ததில் இந்த சீரியல் எனக்கு மிகப்பெரிய ரீச் கொடுத்துள்ளது என்கிறார் நடிகர் டெலிபோன் ராஜ்.