ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விநியோகஸ்தர் சங்கத்தலைவராக இருப்பவர் கலைப்புலி ஜி.சேகரன். ஏற்கனவே பல படங்களை தயாரித்துள்ள இவர், தற்போது ஒரு பூ ஒரு துப்பாக்கி என்றொரு படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார். ஆனால் அப்படத்தை ரிலீஸ் பண்ண முடியாமல் பயந்து கொண்டிருப்பதாக கூறுகிறார். மேலும் அவர் கூறும்போது, ஒரு காலத்தில் சினிமாவில் இருந்தவர்கள் நேர்த்தியாக தொழில் செய்து வந்தனர். ஆனால் இப்போது புதியவர்கள் சினிமாவிற்குள் நுழைந்து சினிமாவை கெடுத்து விட்டனர்.
அழகான மீடியாவான சினிமாவில் யார் வேண்டுமானாலும் படமெடுக்கலாம் என்ற நிலை வந்தபோது, ரசிகர்களை கருத்தில் கொள்ளாமல் அவரவர் விருப்பம் போல் படமெடுக்கின்றனர். இதனால் மக்கள் தியேட்டருக்கு வருவதேயில்லை. அந்த அளவுக்கு புதிதாக வந்தவர்கள் சினிமாவை கண்டம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் சில நல்ல படங்கள்கூட ஓடுவதில்லை. சினிமாவில் நீண்ட காலம் இருந்து வரும் நான், ஒரு பொறுப்பில் இருக்கிறேன். என்றாலும், தற்போது நான் தயாரித்த படத்தை வெளியிடகூட எனக்கு பயமாக உள்ளது என்று கூறிய ஜி.சேகரன், சினிமாவில் தொழில் சுதந்திரம் இருந்தாலும், நிறைய சட்டதிட்டங்கள் உள்ளது. இதை மாற்ற வேண்டும் என்கிறார்.