பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ரீ-என்ட்ரியில் மாஞ்சா வேலு, ராவணன், அநேகன் என சில படங்களில் நடித்த நவரச நாயகன் கார்த்திக், தற்போது புதிதாக இரண்டு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். மேலும், கார்த்திக் புதிய டைரக்டர்களின் படங்களில் நடிக்க மாட்டார் என்று கோலிவுட்டில் நிலவும் கருத்தினை உடைக்க வேண்டும் என்பதற்காக தற்போது புதிய டைரக்டர்கள் கதை சொல்ல வேண்டும் என்று தொடர்பு கொண்டால் அவர்களை அலைய விடாமல் உடனே அழைத்து கதை கேட்டு வருகிறார்.
ஆனால், அப்படி அவரிடம் கதை சொல்ல செல்பவர்கள், கதையையும், அவரது கேரக்டரையும் சொல்லி விட்டு, இந்த மாதிரி நீங்கள் நடிக்க வேண்டும் என்று சொன்னால் மட்டுமே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறாராம் கார்த்திக். கேட்டால், எனக்கென்று ஒரு பாணி உள்ளது. அதை ரசிக்க ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்கிறாராம்.
மணிரத்னம் படங்களைப்பொறுத்தவரை அனைவருமே அவர் சொன்னபடி பேசி நடிப்பார்கள். ஆனால் நான் மட்டும்தான் எனது பாணியலேயே நடித்திருப்பேன். காரணம், எந்த சூழ்நிலையிலும் நான் எனது ஒரிஜினாலிட்டியை இழக்க விரும்பியதில்லை. அதனால் மணிரத்னம்கூட எனக்கான டயலாக்கை என் விருப்பப்படியே பேசி நடிக்க அனுமதித்தார் என்று தனது நிலையை விளக்குகிறாராம் கார்த்திக்.