ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் பிரம்மாண்ட வரலாற்று காவியமான பாகுபலியின் ஆடியோ வரும் மே 31ம் தேதி ரிலீஸ் ஆவது நினைவிருக்கலாம். அதற்கான ஏற்பாடுகள் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றது. இந்த ஆடியோ நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் பிரபல நடிகர் அக்ஷய் குமார், பிரபல தயாரிப்பாளர் கரன் ஜோஹர், எஸ் எஸ் ராஜமௌலியின் படத்தில் நடித்த ஹீரோக்கள் மற்றும் பல துறையை சார்ந்த பிரபலங்களும் கலந்து கொள்வதாக கூறப்பட்டது. ஆனால் இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் அந்த படத்தில் நடிப்பவர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தான் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது. ஏன் இந்த மாற்றம்? எதற்கு என்ன காரணம்?இந்த படத்தில் நடிக்காத பிரபல நடிகரான நானி மட்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அதாவது அவர் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த படத்தில் யங் ரிபல் ஸ்டார் பிரபாஸ், ராணா, அனுஷ்கா மற்றும் தமன்னா ஆகியோர் நடிக்கின்றனர். பிரபல தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா தயாரிக்கும் இந்த படத்தை பிரபல இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்குகிறார். பிரபல இசை அமைப்பாளரான கீரவாணி இசை அமைக்கிறார். இந்த படம் வரும் ஜூலை 10ம் தேதி ரிலீஸ் ஆகின்றது.