டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
டோலிவுட்டின் இரண்டு மிகப்பெரிய மூத்த ஹீரோக்களின் படங்கள் ஒரே நேரத்தில் ரிலீசாகும் வாய்ப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. மெகா ஸ்டார் சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது 150வது படமான ஆட்டோ ஜானியில் நடிக்க இருப்பதை அனைவரும் அறிவர். அந்த படத்தின் பூஜை சிரஞ்சீவியின் பிறந்த தினமான ஆகஸ்ட் 22ம் தேதி நடக்க இருக்கின்றது. இந்த படத்தை வரும் 2016 சங்கராந்தியின் போது ரிலீஸ் செய்ய முடிவு செய்து இருக்கிறார்கள். இந்நிலையில் நந்தமூரி பாலகிருஷ்ணா தனது 99வது படமான டிக்டேட்டரை இந்த மாதம் இறுதியில் தொடங்க இருக்கிறார். பாலைய்யாவை பொறுத்தமட்டில் சங்கராந்தி எப்போதுமே ஸ்பெஷல் தான். அதாவது சங்கராந்தியில் அவர் தனது படத்தை ரிலீஸ் செய்வதை வழக்கமாக கொண்டிருப்பவர். அதனால் அவர் தனது டிக்டேட்டரை வரும் 2016 சங்கராந்தியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது. சில ஆண்டுகளுக்கு முன் பாலைய்யாவின் நரசிம்ம நாயுடும், மெகா ஸ்டாரின் மிருகராஜும் சங்கராந்தியின் போது மோதியது நினைவிருக்கலாம். அந்த மோதலில் பாலைய்யாவின் படம் மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.