ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 'பாகுபலி' படத்தின் இசை வெளியீட்டு மே 31ம் தேதி ஐதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் மைதானத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. கீரவாணி என்கிற மரகதமணி இசையமைத்துள்ள இந்தப் படத்தை எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியுள்ளார். இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல இந்திய மொழிகளிலும், வெளிநாட்டு மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
அதனால், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு இந்தியத் திரையுலகப் பிரபலங்களை அழைக்க முடிவு செய்துள்ளார்கள். ஹிந்தித் திரையுலகிலிருந்து இயக்குனர் கரண் ஜோஹர், நடிகர் அக்ஷய் குமார் ஆகியோரும், தமிழ்த் திரையுலகிலிருந்து ரஜினிகாந்தும், தெலுங்குத் திரையுலகிலிருந்து சிரஞ்சீவி, நாகார்ஜுனா, வெங்கடேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்துக்கு இயக்குனர் ராஜமெளலி மீது எப்போதுமே ஒரு அபிமானம் உண்டு. 'லிங்கா' படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்த போது பேசிய ரஜினிகாந்த், ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தால் நான் கண்டிப்பாக நடிப்பேன்,” என்றார்.
இப்போது திடீரென 'லிங்கா' பிரச்சனை மீண்டும் எழுந்துள்ளதால் ரஜினிகாந்த் ஐதராபாத்திற்குச் சென்று 'பாகுபலி' படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா ? என்று சந்தேகம் எழுந்துள்ளது.