நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? |
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் தற்போது நடித்து வரும் ப்ரூஸ்லீ என்ற புதிய படத்தின் விநியோக உரிமை மிகப்பெரிய தொகைக்கு வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. அந்த படத்தின் வெளிநாட்டு உரிமை சுமார் ரூ 6 கோடிக்கு விற்கப்பட்டு இருப்பதாக தெரிகின்றது. உள்ளூரில் ராயலசீமா பகுதியின் விநியோக உரிமை சுமார் ரூ 8 கோடிக்கு விற்கப்பட்டு உள்ளது. இது போன்று உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விநியோக உரிமை இவ்வளவு பெரிய தொகைக்கு வழங்கப்பட்டு இருப்பது என்பது ஒரு பிரபல ஹீரோவுக்கு ஏற்புடையதாகவே கருதப்படுகின்றது. மேற்கூறிய தகவல்கள் உண்மை எனில் ராம் சரண் ஒரு ரெகார்ட் ஏற்படுத்தி இருக்கிறார் என்று தான் அர்த்தமாகின்றது. இந்த படத்தில் பிரபல முன்னாள் நடிகையான நதியா ஒரு பவர்புல் வேடத்தில் நடிக்கிறாராம். டி.வி.வி. எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பாக தானைய்யா தயாரிக்கும் இந்த படத்தை பிரபல இயக்குனர் ஸ்ரீனு வைட்ல இயக்குகிறார். இந்த படத்தில் ராம் சரண் ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங், தங்கையாக கிருதி கந்தர்பா நடிக்கின்றனர். இந்த படத்திற்கு பிரபல இசை அமைப்பாளரான தமன் இசை அமைப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வரும் அக்டோபர் 15ம் தேதி தசரா பண்டிகையையொட்டி இந்த படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்களாம்.