புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
ராஜ்கிரண் தற்போது காஸ்ட்லியான கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக நடித்து வருகிறார். தாத்தா, மாமா, அப்பா கேரக்டரில் நடிக்க கணிசமாக சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ராஜ்கிரண் அறிமுகமான என் ராசாவின் மனசிலே படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்திருக்கிறார்.
24 வருடங்களுக்கு முன்பு வந்த இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அந்தக் கதையில் மீனா இறந்து விடுவார். அவர் இறக்காமல் இருந்து மீனா, ராஜ்கிரண் தம்பதிகளுக்கு ஒரு மகன் இருந்தால் எப்படி இருக்கும். அவனது இன்றைய காதல் எப்படி இருக்கும், ராசாவின் மனசிலே காதல் எப்படி இருந்தது என்பது மாதிரியான கதையாக இது இருக்குமாம். அதாவது இந்தக்கால காதலை விட அந்தக் கால காதலே சிறந்தது என்பதை சொல்லும் படமாக இருக்கும்.
படத்திற்கான பேப்பர் வேலைகளை முடித்து விட்டார் ராஜ்கிரண். திரைக்கதையும் முழு வடிவம் பெற்றுவிட்டது. மீனாவிடமும் பேசி ஓகே வாங்கி விட்டதாக கூறப்படுகிறது. 5 கோடிக்குள் படத்தை எடுத்துவிட ராஜ்கிரண் முடிவு செய்திருக்கிறார். இதற்காக தயாரிப்பார் தேடிக் கொண்டிருக்கிறார். ஓருவேளை தயாரிப்பாளர் கிடைக்காவிட்டால் தானே தயாரித்து இயக்கவும் முடிவு செய்திருக்கிறார். ராஜ்கிரண், மீனா தம்பதிகள் மகனாகவும், மகனின் காதலியாகவும் புதுமுகங்கள் நடிக்க இருக்கிறார்கள்.