பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வருசமெல்லாம் வசந்தம்,நேசிக்கிறேன், நான் தமிழன்டா, காயிலாங்கடை ஆகிய படங்களை இயக்கிய கே.எஸ். நேசமானவன். இவர் தற்போது ராதா கீதா ஸ்வேதா என்ற படத்தை இயக்குகிறார். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஒழுக்கமான ஒருவன் மூன்று கொலைகளை செய்கிறான். இதனால் தூக்குதண்டனை கைதியாகும் அவன் பின்னர் அதிலிருந்து எப்படி தப்பிக்கிறான் என்பதுதான் இந்த படத்தின் கதை என்று கூறும் டைரக்டர் நேசமானவன், இந்த படத்தில் புதுமுகம் ஒருவர் ஹீரோ நடிப்பதாக கூறுகிறார். அதோடு, வினுசக்கரவர்த்தி, தலைவாசல் விஜய் ஆகிய முன்னணி நடிகர்களும் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடிக்கிறார்களாம்.
மேலும், இந்த படத்தை அடுத்து அவர் அம்மாவின் தொண்டன் என்றொரு படத்தை இயக்குகிறாராம். அப்படம் பற்றி இயக்குனர் நேசமானவன் கூறுகையில், நான் ஏற்கனவே முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைகளை சொல்லும் விதமாக இரண்டு வீடியோ ஆல்பங்களை இயக்கியிருக்கிறேன். அந்த வரிசையில், இப்போது அவரது சாதனைகளை கூறும் வகையில், அம்மாவின் தொண்டன் என்றொரு படத்தை இயக்குகிறேன்.
இதுவும் மற்ற கமர்சியல் படங்களைப்போன்று இரண்டறை மணி நேர படம்தான். 234 தொகுதிகளிலும் முதலமைச்சர் ஜெயலலிதா செய்துள்ள மக்கள் தொண்டுகளை இந்த கதையில் கொண்டு வருகிறேன். இந்த படத்தில் நானே ஹீரோவாக நடிக்கிறேன். இப்படம் முழுக்க முழுக்க ஜெ.,வின் சாதனைகளை சொல்லும் படம் என்பதால் தியேட்டருக்கு வராது. பிரச்சார படமாக மட்டுமே பயன்படுத்தப்படும். அந்த வகையில் தமிழ்நாட்டிலுள்ள மொத்தம் 234 தொகுதிகளிலும் இந்த படம் மக்கள் பார்வைக்காக திரையிடப்படும் என்று கூறும் நேசமானவன், இந்த படத்தில் சூர்யாகாந்த், குண்டு கல்யாணம் உள்பட அதிமுகவைச்சேர்ந்த பல நடிகர் நடிகைகளும் நடிப்பதாக கூறுகிறார்.