'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய் டி.வியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் சிவகார்த்திகேயன். அந்த சமயத்திலேயே தனது நகைச்சுவையான பேச்சுத்திறமையால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். அந்த திறமைக்காகவே அவரை 3 படத்தில் தனது நண்பனாக நடிக்க வைத்தார் தனுஷ். ஆனால் அந்த சமயத்திலேயே மெரினா படத்துக்கு டைரக்டர் பாண்டிராஜ் சிவகார்த்திகேயனை ஹீரோவாக்கினார். இப்படி சினிமாவுக்கு வந்த சிவகார்த்திகேயன், கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான்கராத்தே, காக்கி சட்டை படங்களைத் தொடர்ந்து இப்போது ரஜினிமுருகன் படத்தில் ரஜினியின் ரசிகராகவே நடிக்கிறார். ஆனால் இப்படி படத்துக்காக ரஜினி ரசிகராக நடிக்கும் சிவகார்த்திகேயன் நிஜத்திலும் ரஜினியின் தீவிரமான ரசிகராம். தான் படிக்கிற காலத்தில் ரஜினி படங்கள் தியேட்டருக்கு வரும்போது முதல் நாள் எப்படியேனும் படத்தை பார்த்து விட வேண்டும் என்று தியேட்டர்களில் டிக்கெட்டுக்காக முட்டிமோதியிருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.
அப்படி கவுண்டர்களில் அவர் போராடி டிக்கெட் வாங்கிவிட்டு வெளியே வந்தால் அவரது சட்டை தொப்பலாக நனைந்திருக்குமாம். அதனால் சட்டையை கழற்றி பிழிந்து விட்டு மீண்டும் அதையே போட்டுக்கொண்டு தியேட்டருக்குள் செல்வாராம். அப்போது ரஜினி முகத்தை திரையில் பார்த்த மறுகணமே அவர் டிக்கெட் எடுக்க பட்ட கஷ்டமெல்லாம் பஞ்சாக பறந்து போய் விடுமாம். படம் முடிகிறவரைக்கும் சீட்டி அடித்துக்கொண்டே படத்தை ரசிப்பாராம்.
அப்படி ரஜினி படங்களை தியேட்டர்களில் பார்த்து அவரது ரசிகராக இருந்த தனக்கு இப்போது ரஜினி ரசிகராகவே நடிக்க சான்ஸ் கிடைத்திருப்பது பெரிய பாக்கியமாக கருதுவதாக கூறும் சிவகார்த்திகேயன், இந்த படம் முழுக்க நான் ஹீரோ என்பதை மறந்து ரஜினியின் உண்மையான ரசிகனாகவே நடித்திருக்கிறேன் என்கிறார்.