ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
'வேலையில்லா பட்டதாரி' வெற்றிப் படத்தைத் தொடர்ந்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை தனுஷ் - இயக்குனர் வேல்ராஜ் கூட்டணி படமாக்கி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்தின் இரண்டு கதாநாயகிகளுள் ஒருவராக நடிக்கும் சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கடந்த ஒரு சில வாரங்களாக சமந்தா தொடர்ச்சியாக இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
இந்தப் படத்தில் தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன், கே.எஸ்.ரவிக்குமார், ராதிகா மற்றும் பலர் நடிக்கிறார்கள். வழக்கம் போல அனிருத் இசையமைக்கிறார். முதல் படத்தைப் போலவே இந்தப் படத்தையும் குடும்பப் பாங்கான படமாகத்தான் எடுத்து வருகிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இனி, எமி ஜாக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க உள்ளதாகத் தெரிகிறது. தனுஷ் நடிப்பில் அடுத்து 'மாரி' படம் வெளி வர உள்ளது. இந்தப் படத்தையடுத்து 'விஐபி 2' வெளிவரும். இப்படத்திற்கு இதுவரை இன்னும் பெயர் வைக்கவில்லை. 'வேலையில்லா பட்டதாரி 2' என்றே வைப்பார்களா அல்லது வேறு பெயரை வைப்பார்களா என்பது இனிமேல்தான் தெரியும்.