‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ஜெயராம் தற்போது மலையாளத்தில் நடித்துவரும் படம் 'திங்கள் முதல் வெள்ளி வரை'. இதில் ஜெயராம் மெகா சீரியலுக்கு கதை எழுதும் எழுத்தாளராக நடிக்கிறார். கதாநாயகி ரிமி டாமியோ தினந்தோறும் சீரியல் அத்தனையையும் ஒன்றுவிடாமல் பார்த்துவிடும் சீரியல் பைத்தியம் பிடித்த கிராமத்து பொண்ணு. இப்படி ஒரு காம்பினேசனை வைத்து இந்தப்படம் முழுக்க முழுக்க காமெடியாக தயாராகி வருகிறது. இந்தப்படத்தில் நடித்த நடித்தபோது ஜெயராமுக்கும் தனக்குமான சுவராஸ்ய சம்பவம் ஒன்றை ரிமி டாமி கூறியுள்ளார்..
அதாவது சீரியல் பைத்தியமான ரிமி டாமி பலவிதமான காமெடி கூத்துக்கள் பண்ணுவது போல ஒரு பாடல் காட்சியை படமாக்கியுள்ளார்கள். அதில் ஒரு காட்சியின்போது ஜெயராமின் கழுத்தில் தனது சுடிதார் துப்பட்டாவால் தமாஷாக இறுக்கவேண்டும். ஆனால் ரிமியோ கொஞ்சம் வேகமாகவே இறுக்கிவிட, கிட்டத்தட்ட சாவின் அருகிலேயே சென்று வந்துவிட்டாராம் ஜெயராம்..
ஆனால் இதுபற்றி ரிமியிடம் எதையும் காட்டிக்கொள்ளாத ஜெயராமை, அவரது கழுத்து சிவந்திருந்ததை வைத்து படத்தின் இயக்குனர் கண்டுபிடித்துவிட்டாராம். ஆனாலும் அதை ஒரு குறையாக அவரிடம் காட்டிக் கொள்ளவில்லையாம். அதேபோல, சாதாரணமாக ஜெயராமின் கைகளை பிடித்துக்கொண்டு பேசும்போது கூட ரிமி அழுத்தமாக பற்றுவதால் ஜெயராமின் கைகளில் ரிமியின் நகங்கள் பதிந்ததாகவும், அதையும் கூட ஜெயராம் பெரிதுபடுத்தாமல் பெருந்தன்மையாக விட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார் ரிமி டாமி.