‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
சென்னையில் கியூபா திரைப்பட விழா நேற்று தொடங்கியது. சென்னை ரஷிய கலாச்சார மையத்தில் நாளை வரை நடக்கும் இந்த விழாவில், கியூபா நாட்டில் தயாரான முக்கிய படங்கள் திரையிடப்படுகிறது. இந்த படங்கள் வெளிமார்க்கெட்டில் டிவிடியாக கிடைக்காத அரிய படங்களாகும். உலக திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்த படங்களை தேர்ந்தெடுத்து திரையிடுகிறார்கள்.
இதனை இந்தோ சினி அப்ரியேஷன் அறக்கட்டளை பொதுச் செயலாளர் தங்கராஜ் துவக்கி வைத்தார். "உலகில் குறைந்த அளவே திரைப்படங்களை தயாரிக்கும் நாடுகள் கூட தங்கள் படத்தை வெளிநாடுகளில் திரையிட விரும்புகிறது. அதன் மூலம் தங்கள் நாட்டின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பரப்ப விரும்புகிறது. திரைப்படத்தில் ஆர்வம் இல்லாத நாடுகள் கூட திரைப்படம் எல்லைகளை தாண்டிய மகத்தான ஊடகம் என்பதை உணர்ந்திருக்கிறது. எங்கள் அமைப்பின் சார்பில் இன்னும் பல நாடுகளின் திரைப்பட விழாக்களை நடத்த உத்தேசித்திருக்கிறோம்" என்றார் தங்கராஜ். "கியூபா படங்களை காண அனுமதி இலவசம் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இருக்கைகள் ஒதுக்கப்படும்" என்று விழா நிர்வாகிகள் தெரிவித்தனர்.