இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இயக்குனர் கஸ்தூரி ராஜா, ''காசு பணம் துட்டு'' என்கிற படத்தை கடந்த 2 வருடங்களாக எடுத்து வருகிறார். இது குடிசைப் பகுதியில் வாழும் சிறுவர்களை சமூக விரோதிகள் எப்படி குற்றச் செயல்களில் ஈடுபடுத்துகிறார்கள். அவர்கள் எப்படி போதைக்கு அடிமையாகிறார்கள், அவர்களின் வாழ்க்கை என்ன ஆகிறது என்பதைப் பற்றிய படம். இந்தப் படத்திற்காக இரண்டு வருடங்கள் குடிசைப்பகுதி மக்களையும், அண்டர்கிரவுண்ட் தாதாக்களையும் சந்தித்து பேசி திரைக்கதை அமைத்து உருவாக்கியதாக கஸ்தூரிராஜா பல தருணங்களில் கூயிருக்கிறார்.
5 மாதங்களுக்கு முன்பு படத்தை தணிக்கை குழுவினருக்கு போட்டுக் காட்டினார். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் "படத்தின் நோக்கம் சரிதான் அதை எடுத்த விதம்தான் பயங்கரம்" என்று சொல்லி ஏ சான்றிதழ் கொடுத்தனர். அதை எதிர்த்து கஸ்தூரி ராஜா மறு ஆய்வு கமிட்டிக்கு மனுச் செய்தார். மறு ஆய்வு கமிட்டி படத்தை பார்த்துவிட்டு "இது தடைசெய்யப்பட வேண்டிய படம், என்றாலும் நல்ல கருத்தை சொல்வதால் ஏ சான்றிதழ்தான்" என்று உறுதியாக கூறிவிட்டார்கள்.
இதனால் படத்தில் போதை மருந்து அருந்தும் காட்சிகள், வன்முறை காட்சிகள் சிலவற்றை நீக்கிவிட்டு மறு தணிக்கைக்கு அனுப்பி வைத்தார். அதை பார்த்துவிட்டு யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். படத்தை ஜுன் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்