ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
மீண்டும் ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய பிறகு கவுண்டமணி ஆளே மாறிவிட்டார். பத்திரிகைகளுக்கு பேட்டியே தரமாட்டேன் என்று அடம்பிடிக்கும் அவர் இப்போது பேட்டி கொடுக்க ஆரம்பித்துவிட்டார். "என்னப்பா பண்றது படம் தியேட்டருக்கு போகணும்னா அந்த கருமத்தை செஞ்சிதானே ஆகணும்" என்கிறார். அடுத்து தான் நடித்து வெளிவர முடியாமல் தவிக்கும் படம் வெளிவர முயற்சிகள் எடுக்கிறார்.
இதுவரை தனது பிறந்த நாளை கொண்டாடாத கவுண்டமணி தனது பிறந்த நாளை படப்பிடிப்பிலேயே கொண்டாடியிருக்கிறார். தற்போது அவர் நடித்து வரும் நடித்து வரும் எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை படத்தின் படப்பிடிப்பு இடைவெளியில் படப்பிடிப்பு குழுவினருடன் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியதோடு. அவர்களது வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டிருக்கிறார்.
ஒருகாலத்தில் பிறந்த நாள் கொண்டாடுவதை "ஏம்ப்பா நாம என்ன காந்தியா, காமராசரா பிறந்த நாள் கொண்டாடுறதுக்கு நீ ஒரு மொள்ள மாரி நான் ஒரு முடிச்சவிக்கி" என்று டயலாக் பேசியவர்தான் கவுண்டமணி. இப்போது ஆளே மாறிவிட்டார் இனி "சினிமாவுல இதெல்லாம் சாதாரணமப்பா"ன்னு சமாளிப்பாரோ என்னவோ.