ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அப்போஸ்தல பல்கலைகழத்தின் சென்னை கிளை கல்வி, கலாச்சாரம், இயற்கை வளம், சமூக மேம்பாடு, எழுத்துப் பணியில் சிறந்து விளங்குவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டு எழுத்துப் பணிக்காக திரைப்பட பாடலாசிரியர்கள் ப்ரியன், அண்ணாமலை ஆகியோருக்கு டாக்டர் பட்டங்களை வழங்கிறது. சென்னை நுங்கம்பாக்கத்தல் உள்ள ஓட்டல் ஒன்றில் நடந்த பட்டமளிப்பு விழாவில் வி.ஜி.சந்தோஷம் தலைமையில் நீதிபதி டாக்டர் கே.ஞானப்பிரகாசம் முன்னிலையில் பேராயர் கார்டினால் டாக்டர் எஸ்.எம்.ஜெயக்குமார் இருவருக்-கும் டாக்டர் பட்டத்தை வழங்கினார்.
விழாவில் டாக்டர் பட்டம் பெற்ற ப்ரியன் பேசும்போது, " நான் சினிமா ஆர்வத்தில் திருச்சியிலிருந்து சென்னை வந்தேன் வந்த எனக்கு சென்னையே புதிது. சினிமா புரியவில்லை, பாட்டு எழுத யாரைப் பார்ப்பது, என்ன செய்வது என்று தெரியவில்லை. கதவு தட்டிய இடங்களில் எல்லாம் புறக்கணிப்புகள், நிராகரிப்புகள் ,அவமானங்கள் தான் பரிசாகக் கிடைத்தன. உதவி செய்ய ஒருவருமில்லை இதனால் பல நாட்கள் வீணாயின .எனக்கு நம்பிக்கை இருந்தாலும் குடும்பத்திலும் மகன் வீணாகி விட்டானே என்று வருத்தப் பட்டனர். அப்படி நம்மைப் போல் யாரும் தவிக்கக் கூடாது என்கிற நோக்கத்தில்தான் திரைப்பாக்கூடம் தொடங்கினேன். பல திரைக்கவிஞர்களை உருவாக்கி வருகிறேன். என்றார்.