ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் பாலசந்தர் இயக்கிய 'அழகன்' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் மரகதமணி. தொடர்ந்து 'நீ பாதி நான் பாதி, பாட்டொன்று கேட்டேன், சேவகன், வானமே எல்லை, ஜாதி மல்லி, பிரதாப், கொண்டாட்டம், நான் ஈ, நீ எங்கே என் அன்பே” ஆகிய படங்களுக்கு இசையமைத்தார். தெலுங்கில் கீரவாணி என்ற பெயரில் எண்ணற்ற சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். பிரபல இயக்குனரான எஸ்.எஸ்.ராஜமௌலியின் சகோதரர்தான் மரகதமணி. ராஜமௌலி இயக்கத்தில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'பாகுபலி' படத்துடன் திரைப்படங்களுக்கு இசையமைப்பதிலிருந்து ஓய்வு பெறப் போவதாக முன்னர் அறிவித்திருந்தார்.
இப்படத்தின் இசை வெளியீடு ஐதராபாத்தில் இன்னும் சில நாட்களில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இரண்டு பாகமாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் பின்னணி இசைச் சேர்ப்பு வேலைகளில் தற்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். வரும் 31ம் தேதி நடைபெற உள்ள 'பாகுபலி' படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிதான் அவர் கடைசியாக கலந்து கொள்ளும் இசை வெளியீட்டு நிகழ்ச்சியாக இருக்கப் போகிறது என டோலிவுட்டில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகத்திற்கென தனியான ஒரு இசை வெளியீடு இருக்குமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள். கடந்த 25 வருடங்களாக இசையமைப்பாளராக இருந்து வரும் மரகதமணி வாழ்க்கையின் மற்ற விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடிவெடுத்தே ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளார் என்கிறார்கள். அவருடைய முடிவு நிரந்தரமானதா அல்லது மாற்றிக் கொள்வாரா என்பதை டோலிவுட்டில் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். அனைத்தும் சில நாட்களில் தெரிந்துவிடும்.