தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அஜீத்தின் மங்காத்தா படத்தை இயக்கிய பிறகு புதுமுகங்கள் சிலரை வைத்து சரோஜா பாணியில் ஒரு படம் இயக்க வேண்டும் என்பதுதான் வெங்கட்பிரபுவின் ஆசையாக இருந்தது. ஆனால், அந்த நோக்கத்துடன் தயாரிப்பாளர்களிடம் கதை சொன்னபோது யாரும் உடன்படவில்லை.
அதனால், அந்த கதையை தள்ளி வைத்து விட்டு கார்த்தியை வைத்து பிரியாணி கிண்டினார். ஆனால் பிரியாணி ஊசிப்போய் விட்டது. அதையடுத்து, சூர்யாவை வைத்து ஒரு ஹிட் கொடுத்து மார்க்கெட்டை நிறுத்தி விட வேண்டும் என்றுதான் இப்போது மாஸ் படத்தை இயக்கியிருக்கிறார் அவர்.
ஆனால், இது பேய் படம் என்பதால், அஞ்சான் அளவுக்கு சோடை போகாது. எப்படியும் ஓடிவிடும் என்று எதிர்பார்க்கும் வெங்கட்பிரபு, அடுத்தபடியாக மங்காத்தாவுக்கு பிறகு இயக்குவதற்காக தயார் செய்து பின்னர் கிடப்பில் போட்டிருந்த ஸ்கிரிப்ட்டை தூசு தட்டுகிறாராம். அதில் சில புதுமுக நடிகர்களை நடிக்க வைக்கப்போகிறாராம். ஒருவேளை அது செட்டாகவில்லை என்றால், சென்னை 28, சரோஜா படங்களில் நடித்த தனது பழைய டீமை மீண்டும் களமிறக்கவும் ஒரு ஐடியா வைத்திருக்கிறாராம்.