இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் முக்கியத்துவம் வாய்ந்த நடிகர் தான் ரகுமான். சொல்லப்போனால் மலையாளத்தை விட தமிழில் தான் அதிகப்படங்களில் நடித்து வருகிறார் ரகுமான். சமீபத்தில் ஜோதிகாவின் கணவராக அவர் நடித்துள்ள '36 வயதினிலே' படம் வெற்றிகரமாக ஓடுவதுடன் ரகுமானுக்கும் பாராட்டுக்களை வாங்கி தந்துள்ளது. மலையாளத்தில் குறைந்த அளவிலான படங்களில் மட்டுமே நடிக்கும் ரகுமான், தற்போது 'லாவண்டர்' என்கிற படத்தில் நடித்துள்ளார். அதன் புரமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் சூர்யா கூட இன்று கொச்சின் வருகிறார்.
ரகுமானுக்கு தியேட்டர்க்காரர்கள் மீது லேசான வருத்தம் இருக்கிறது. கேரள சினிமா தியேட்டர்கள் ஸ்டார் வேல்யூ உள்ள படங்களுக்கு மட்டுமே தியேட்டர்களை தர போட்டிபோடுகின்றன என்பதுதான் அது. சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் அதிலும் ஸ்டார் நடிகர்கள் நடித்திருந்தால் தான் நிறைய தியேட்டர்கள் கொடுக்கின்றனர்.. எல்லா படங்களுக்கும் சம உரிமை தரவேண்டும் என்று சொல்லவில்லை. அதேசமயம் சின்ன படங்களுக்கும் கணிசமான தியேட்டர்களை ஒதுக்குங்கள் என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார் ரகுமான்.