தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
திரைப்படத்துறையில் நடிகர் ஒளிப்பதிவாளர் என இரட்டைக்குதிரையில் சவாரி செய்து வருபவர் நட்டி என்கிற நட்ராஜ். சமீபத்தில் வெளியான 'சதுரங்கவேட்டை', 'கதம் கதம்' ஆகிய படங்களில் நடித்த நட்டி நட்ராஜ் தற்போது விஜய் நடிக்கும் 'புலி' படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். 'புலி' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே பலரிடம் கதைகள் கேட்டு வந்தார். அவர் கேட்ட கதையில் இயக்குனர் பாண்டிராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ராமு செல்லப்பா சொன்ன கதை அவருக்குப் பிடித்துப்போனது. எனவே புலி படம் முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்கலாம் என்று சொல்லி இருக்கிறார்.
அதன்படி விரைவில் ராமு செல்லப்பா இயக்கும் படத்தில் இணையவிருக்கிறார் நட்ராஜ். இந்தப் படத்தை 'ஈராஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. நட்டி நட்ராஜ் நடிக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. இந்த படத்தில் 'நட்டி' நட்ராஜுக்கு ஜோடியாக நடிக்க சமந்தா உட்பட முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இப்படத்திற்கான தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வும் நடந்து வருகிறது.