தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் மாஸ். நயன்தாரா, பிரணிதா, பார்த்திபன், சமுத்திரகனி நடித்துள்ளனர். இது ஒரு காஸ்ட்லியான பேய் படம்-. வருகிற 29ந் தேதி வெளிவருகிறது. மாஸ் வெளிவரும் அதே நாளில் புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ள இருவர் ஒன்றானால் படமும் வெளிவருகிறது. இதில் பி.ஆர்.பிரபு, கிருத்திகா மாலினி என்ற புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். குரு கிருஷ்ணன் இசை அமைத்துள்ளார், குமார் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளர் ஏ.எம்.சம்பத்குமார் தயாரித்துள்ளார், இன்னொரு உதவியாளர் அன்புஜி இயக்கி உள்ளார்.
மாஸ் படம் வெளிவரும்போது துணிச்சலுடன் புதுமுகங்கள் நடிக்கும் உங்கள் படத்தை வெளியிடுகிறீர்களே என்று தயாரிப்பாளர் சம்பத்குமாரிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது: நாங்கள் படத்தை விளம்பரப் படுத்தும்போதே "பேய் படங்களின் நடுவே ஒரு காதல் படம்" என்ற டேக் லைன் போட்டுத்தான் விளம்பரம் செய்தோம். சலிப்பூட்டும் பேய் படங்களை பார்த்து மக்கள் சோர்வடைந்துள்ளனர். அவர்களுக்கு இந்தப் படம் புதுவித அனுபவமாக இருக்கும். அந்த நம்பிக்கையில்தான் வெளியிடுகிறோம். இது 100 சதவிகித பிராக்டிகலான காதல் படம். காதல் போயின் சாதல் என்பது அந்தக் காலம். காதல் போயின் இன்னொரு காதல் என்பது இந்தக் காலம். அதைத்தான் படம் சொல்கிறது. என்றார் சம்பத்குமார்.