டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித், அனுஷ்கா, த்ரிஷா, நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் தமிழில் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி அன்று வெளியானது. என்னை அறிந்தால் படம் தமிழில் வெளியிடப்படும் அதே தினத்தில் தெலுங்கிலும் வெளியாகும் என சொல்லப்பட்டது. ரிலீஸ் தேதி நெருங்கும்வரை பட வேலைகள் திட்டமிட்டபடி முடியாத காரணத்தினால் தமிழில் வெளியான தினத்தில் தெலுங்கில் வெளியாகவில்லை. என்னை அறிந்தால் படம் தமிழில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து சில வாரங்களிலேயே தெலுங்கில் வெளியிடும் முயற்சி தொடங்கப்பட்டது. சரியான தியேட்டர்கள் கிடைக்காததால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.
இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு டப்பிங் வெளியீடு பற்றி முடிவு செய்தனர். ஒருவழியாக கடந்த 15 ஆம் தேதி அன்று இப்படம் ரிலீஸ் ஆனது. எந்தவாடு கானி (யாரா இருந்தா எனக்கென்ன) என்ற பெயரில் தெலுங்கில் ரிலீஸாகி உள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 150க்கும் அதிகமான திரையரங்குகளில் எந்தவாடு கானி வெளியாகி உள்ளது. ஆந்திராவில் மட்டுமல்லாமல் கர்நாடகாவிலும் இப்படம் வெளியாகி இருக்கிறது. அஜித் நடித்த படங்களிலேயே தெலுங்கில் அதிக திரையரங்குகளில் வெளியான படம் இதுதானாம். 150 தியேட்டர்களில் வெளியான எந்தவாடு கானி தற்போது 75க்கும் அதிகமான தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வாரம் சூர்யாவின் மாஸ் படத்தின் தெலுங்கு டப்பிங்கான ராக்ஷஷடு வெளியாகிறது.
ஆக.. அஜித் - சூர்யா ஆந்திராவிலும் மோதுகிறார்கள்.