ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சின்னத்திரை ரசிகர்களுக்கு சந்த்ராவை தெரியாமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு கடந்த 10 ஆண்டுளாக தமிழ், மலையாளம், தெலுங்கு சீரியல்களின் ஹீரோயினாக நடித்து வருகிறவர். கே.பாலச்சந்தர், பாலுமகேந்திரா இயக்கிய தொடர்களின் மூலம் புகழ் பெற்றவர். தற்போது, தமிழில் பாசமலர் தொடரிலும், தெலுங்கில் சீதகோகா சிலுகா என்ற தொடரிலும் நடித்து வருகிறார். அவ்வப்போது சில மலையாளம் மற்றும் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.
சந்த்ரா தற்போது தனது தாயருடன் இணைந்து மியரல் ஆரா என்ற நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இது கேரளாவின் புகழ்பெற்ற சுவர் ஓவியங்களை ஆடைகளில் வரைந்து டிசைன் பண்ணித் தரும் நிறுவனம். கேரள இந்து மணமகள் அணியும் ஆடை இது. தற்போது இதனை சென்னையில் நடத்தி வரும் சந்த்ரா விரைவில் கேரளாவில் தொடங்க இருக்கிறார். சந்த்ராவின் அம்மா, மகளுக்கு தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருகிறார். விரைவில் திருமணம் நடக்கும் என்று தெரிகிறது.