பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
வாலி, குஷி என மெகா படங்களை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. பின்னர் நியூ, அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி, வியாபாரி, இசை என பல படங்களின் தானே ஹீரோவாகவும் நடித்தார். இந்த நிலையில், தற்போது வை ராஜா வை படத்திற்கு பிறகு இறைவி, யாட்சன் படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். கடைசியாக அவர் இயக்கி நடித்த இசை பெரிய அளவில் நஷ்டத்தை கொடுத்து விட்டது. அதனால், அடுத்தபடியாக தமிழில் படம் இயக்காமல் தெலுங்கு படம் இயக்கப்போவதாக கூறி வருகிறார். அதோடு, இனிமேல் தமிழில் எந்த ஹீரோக்களையும் வைத்து அவர் படம் இயக்கும் எண்ணத்திலும் இல்லையாம்.
அப்படி தமிழில் படம் இயக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டால், தன்னைத்தானே இயக்கிக்கொள்வாராம் எஸ்.ஜே.சூர்யா. இந்த முடிவுக்கு அவர் வருவதற்கு முக்கிய காரணம், அவரது ஹிட் படங்களில் நடித்த சில முன்னணி ஹீரோக்களிடம் அவர் மீண்டும் கால்சீட் கேட்டபோது கைவிரித்து விட்டார்களாம். அதனால்தான் மற்றவர்களை வைத்து படம் இயக்கும் ஆசையே அவருக்கு போய் விட்டதாம். அதோடு, தனக்கு பரிட்சயமில்லாத ஹீரோக்களிடம் சென்று கால்சீட் கேட்டு நிற்கும் நிலையிலும் இப்போது அவரது மனநிலை இல்லையாம்.