இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நிழல்கள் படத்திற்காக இளையராஜாவின் இசையில் பொன்மாலைப்பொழுது என்ற பாடல் மூலம் பாடலாசிரியர் ஆனவர் வைரமுத்து. அதைத்தொடர்ந்து இளையராஜா கூட்டணியில் ஏராளமான படங்களுக்கு பாடல் எழுதி வந்தவர், ஒரு கட்டத்தில் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வந்து பாடல்கள் எழுதத் தொடங்கினார்.
பின்னர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த ரோஜா படத்தில் இருந்து இப்போதுவரை அவர் இசையமைக்கும் படங்களில் கண்டிப்பாக தானும் இடம் பிடித்து வருகிறார். ஆனால் சமீபகாலமாக ரகுமான் இசையமைக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதால் புதிதாக அறிமுகமாகும் இசையமைப்பாளர்கள் பாடல் எழுத அழைத்தால்கூட மறுப்பதில்லை வைரமுத்து.
ஆனால், அப்படி தன்னை புதியவர்கள் எழுத அழைத்தால் ஒரு கண்டிசன் போடுகிறார் அவர். அதாவது படத்தின் மொத்த பாடல்களை நானே எழுதுவேன் என்பதுதான் அது. அந்த கண்டிசனுக்கு உடன்பட்டால் மட்டுமே பாடல் எழுதிக்கொடுக்கிறார். அதேசமயம், புதியவர்களின் இசையில் பாடல் எழுத இப்படி கண்டிசன் போடும் வைரமுத்து, ஏ.ஆர்.ரகுமான் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல் எழுத அப்படி கண்டிசன் போடுவதில்லை. அவர்களின் படங்களில் இரண்டொரு பாடல்கள் எழுத வாய்ப்பளித்தாலும் மறுக்காமல் எழுதிக்கொடுக்கிறார்.