தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
1000 படங்களுக்கு இசையமைத்து விட்ட இளையராஜா, தனது பாடல்கள் அத்துமீறி பயன்படுத்தப்பட்டு வருவதை தடுக்க பல சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருகிறார். அதோடு, தன் பெயர், புகைப்படத்தை விளம்பரங்களில் பயன்படுத்துவதற்கும் தற்போது தடை கோரியுள்ளார். இந்த நிலையில், முன்பெல்லாம் தான் இசையமைக்கும் படங்களின் பாடல்களை ஆடியோ நிறுவனங்களுக்கு ரைட்ஸ் கொடுப்பதற்கு தயாரிப்பாளர்களுக்கு உரிமை கொடுத்து வந்த இளையராஜா, இப்போது அப்படி யாருக்குமே உரிமை கொடுப்பதில்லை.
மாறாக, பாடல்களின் ரைட்ஸை தானே வைத்துக்கொண்டு அதை நேரடியாக சோசியல் மீடியாக்களுக்கும், விளம்பர மீடியாக்களுக்கும் கொடுக்கிறார். மேலும், தனது பாடல்கள் எத்தனை முறை ஒளிபரப்பப்படுகிறதோ அதற்கான ராயல்டி வரும்போது அதில் அப்படங்களை தயாரித்தவர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் கொடுக்கிறாராம்.