பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
பாடலாசிரியர் பா.விஜய் சொந்தமாக தயாரித்து, இயக்கியுள்ள படம் ஸ்ட்ராபெரி. இதில் நான் ராஜாவாக போகிறேன் படத்தில் நடித்த அவ்னி மோடி ஹீரோயின். சமுத்திரகனி, தேவயானி, முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். ரோபோ சங்கர், மயில்சாமி, இமான் அண்ணாச்சி காமெடி கேரக்டரில் நடிக்கிறார்கள். ஜோ மல்லூரி வில்லனாக நடிக்கிறார். தம்பி ராமைய்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இதுவும் ஒரு பேய் படம்தான். பேயாக நடிப்பவர் அவ்னிமோடி.இரண்டு வருடங்கள் போராடி படத்தை முடித்து விட்டார் பா.விஜய்.
படத்தை பற்றி அவர் கூறியதாவது: சினிமாவில் நடிக்க வேண்டும் என்றுதான் விரும்பினேன். நான் கற்ற தமிழ் சினிமா பாடலாசிரியராக்கியது. என்றாலும் என் கனவை அடைகாத்து வந்தேன். மற்றவர்களை சிரமப்படுத்தக்கூடாது என்பதற்காக எனது முதல் படமான ஞாபகங்களை என் சொந்த செலவில் எடுத்தேன். ஒரு கவிஞனுக்கே உரிய கவித்தன்மையோடு அந்தப் படத்தை எடுத்தேன். படம் ஒரு வாரம்கூட ஒடவில்லை. அடுத்து இளைஞன் படம். பிரமாண்ட பட்ஜெட். தொழில்நுட்ப ரீதியாக பெரிதாக பேசப்பட்ட படம். அதுவும் வெற்றிப் பட வரிசையில் வரவில்லை.
அதற்காக நான் சோர்ந்து போகவில்லை. பார்ப்பவர்கள் எல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பித்ததைத்தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பாடலாசிரியர்கள் ஏன் சினிமாவின் மற்ற ஏரியாவில் தோற்றார்கள் என்பதை அலசி ஆராய்ந்து பார்த்தேன். கண்டுபிடித்து ஒரு விஷயத்தைதான்தான். பாடல் எழுதும்போது தவிர மற்ற நேரத்தில் கவிஞன் என்பதை மறந்து ஒரு கமர்ஷியல் சினிமாக்காரனாக, லாபம் சம்பாதிக்கும் வியாபாரியாக மாற வேண்டும் என்று கண்டுபிடித்தேன். அந்த மனநிலையில்தான் இந்தப் படத்தை தயாரித்து, இயக்குகிறேன். எனது கம்பெனி பெயரும், படத்தின் பெயரும் ஆங்கிலம்தான். அதற்காக நான் வெட்கப்படவில்லை. என் தமிழ் பற்றை வெளிப்படுத்த பல இடங்கள் இருக்கிறது. கவிஞனாக, புத்தகங்கள் மூலமாக அதைச் செய்வேன்.