தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிம்புவை சில மாதங்கள் மட்டுமே காதலித்த நயன்தாரா, அதன்பிறகு அவரை விட்டு பிரிந்தவர் சினிமாவில் மின்னல் வேகத்தில் வளர்ந்து நின்றார். அதிலும் பில்லா படத்துக்கு பிறகு அவருக்கு ஏராளமான இளவட்ட ரசிகர்கள் கிடைத்தனர். அதனால் பின்னர் ரசிகர்களை கருத்தில் கொண்டு படத்துக்கு ஒரு பாடலிலாவது படுகவர்ச்சியாக நடிப்பதை தனது பாணியாக்கிக்கொண்டார் நயன்தாரா.
அப்படி நடித்து வந்தவர் பின்னர் பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ளயிருந்தபோது படங்களை குறைத்துக்கொண்டதால் அவரது மார்க்கெட் சரிந்தது. ஆனால், அதையடுத்து அவரை விட்டு நயன்தாரா பிரிந்து விட்டார் என்றதும் படங்களுக்கு அவரை மாறி மாறி புக் பண்ணினார்கள் தயாரிப்பாளர்கள். இதனால் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிசியான நடிகையானார் நயன்தாரா.
அந்தவகையில், இப்போது இன்னும் அதிகப்படியான படங்களை கைப்பற்றியிருக்கும் நயன்தாராவின் படக்கூலியும் 2 கோடியில் இருந்து 3 கோடி அளவுக்கு எகிறி நிற்கிறது. இதைப்பார்த்து மற்ற நடிகைகளை விட ஹன்சிகாதான் ரொம்பவே பீல் பண்ணிக்கொண்டிருக்கிறார். காரணம், எப்படி நயன்தாரா காதலில் விழுந்து பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தாரோ,அதேபோல்தான் ஹன்சிகாவும் சிம்புவுடன் காதலில் விழுந்து சில மாதங்களிலேயே தெளிவு பெற்று நடிக்க வந்தார்.