ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
“பொல்லாதவன், ஆடுகளம்” ஆகிய இரண்டு வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றி மாறன், தனுஷ் மீண்டும் இணையும் 'வட சென்னை' படம் பற்றிய அறிவிப்பை சற்று முன்னர் தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
“பொல்லதவன்' படப்பிடிப்பின் போதே 'வட சென்னை' படத்தின் கதையை வெற்றி மாறன் சொல்லியிருந்தார். 'விஐபி' குழுவினரின் பெயரிடப்படாத படத்திற்குப் பிறகு நான் 'வட சென்னை' படத்தில் நடிக்க உள்ளேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் ஆரம்பமாகும், நாயகியாக சமந்தா நடிக்க உள்ளார். 2016ம் ஆண்டு இந்தப் படம் வெளியாகும், மற்ற விவரங்கள் விரைவில்” என தனுஷ் அவருடைய டிவிட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வெற்றிமாறன் கடைசியாக இயக்கிய 'ஆடுகளம்' படம் 2011ம் ஆண்டு வெளிவந்தது. 'வட சென்னை' படத்தை சிம்புவை வைத்து அவர் ஆரம்பிக்கப் போகிறார் என சில வருடங்களுக்கு முன்பே சொன்னார்கள். ஆனால், அதன் பின் அந்த செய்தியும் அப்படியே அமுங்கிப் போய்விட்டது. இப்போதுதான் 'விசாரணை' என்ற குறைந்த நேரமே ஓடும் ஒரு படத்தை இயக்கி முடித்திருக்கிறார் வெற்றிமாறன்.
தனுஷ் தன்னுடைய அறிவிப்பில் 'பொல்லாதவன்' படப்பிடிப்பின் போதே 'வட சென்னை' கதையப் பற்றிச் சொல்லியிருக்கிறார் என்று சொல்லியிருப்பதன் பின்னணியில் ஏதோ ஒன்று இருக்கிறது. சிம்பு நடிக்க வேண்டிய படத்தை அவர் தட்டிப் பறித்து விட்டாரோ என்று யாரும் சொல்லக் கூடாது என்பதற்காகவே அவர் இப்படிப் போட்டிருக்கவும் வாய்ப்புள்ளது.