இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பொல்லாதவன், ஆடுகளம் என இரண்டு மாபெரும் வெற்றி படங்களை கொடுத்தவர் வெற்றி மாறன். இந்த இரண்டு படங்களிலும் தனுஷ் தான் ஹீரோ. இதில் ஆடுகளம் படத்திற்காக தேசிய விருதும் பெற்றார் தனுஷ். இந்நிலையில் இந்தப்படங்களுக்கு அடுத்துப்படியாக விசாரணை என்ற படத்தை இயக்கியுள்ளார் வெற்றிமாறன். அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள இப்படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது.
இந்நிலையில், வட சென்னை என்ற படத்தை சிம்புவை வைத்து இயக்க போவதாக அறிவித்திருந்தார் வெற்றி மாறன். ஆனால் இன்று வரை அந்தபடம் துவங்கப்படவே இல்லை. பல்வேறு காரணங்களால் படத்தை துவக்க முடியாத சூழல் உருவாகி இருக்கிறது. ஏற்கனவே சிம்பு நடித்த வாலு, வேட்டை மன்னன், இது நம்ம ஆளு போன்ற படங்கள் பல பிரச்னைகளால் ரிலீஸாகாமல் இருக்கிறது. இதனால் சிம்புவை வைத்து படங்கள் எடுக்க பலர் தயங்குகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில், வட சென்னை படத்தில் சிம்புவுக்கு பதிலாக தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வௌியாகியுள்ளது. சிம்புவுக்காக சொன்ன கதையில், தனுஷூக்காக சில மாற்றங்கள் செய்திருக்கிறாராம் வெற்றி மாறன். தனுஷூம் கதையை கேட்டு ஓ.கே. சொல்லிவிட்டதாகவும் விரைவில் படம் ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே தனுஷ் - வெற்றி மாறன் கூட்டணியில் சூதாடி என்ற படம் உருவாக இருக்கிறது. அதற்கு முன்பாகவே வட சென்னை படத்தை முடித்துவிட்டு பிறகு சூதாடியில் இணைய இருவரும் முடிவெடுத்திருக்கிறார்களாம்.