ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கமரகட்டு, டிமான்ட்டி காலனி, நண்பர்கள் நற்பணி மன்றம், விந்தை, திறந்திடு சீசே என நான்கு படங்கள் நேற்று வெளியாகின. இவற்றில் கமரகட்டு படத்தை இயக்கியவர் ராம்கி ராமகிருஷ்ணன். இவர் பிரபலமான கலை இயக்குநர். எஸ்.ஏ.சி. ராம்கி என்ற பெயரில் பல படங்களில் ஆர்ட் டைரக்டராகப் பணியாற்றியவர். சில வருடங்களுக்கு முன் விவேக்கை முதன்முதலில் ஹூரோவாக வைத்து சொல்லி அடிப்பேன் என்ற படத்தை இயக்கினார். அந்தப்படம் வெளிவரவில்லை. அதன் பிறகு இதயம் திரையரங்கம் என்ற படத்தை இயக்கினார். தற்போது கமரகட்டு படத்தை இயக்கி உள்ளார்.
டிமாண்ட்டி காலனி படத்தை இயக்கியவர் இயக்குனர் அஜய் ஞானமுத்து. இவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவர். நண்பர்கள் நற்பணி மன்றம் படத்தை இயக்கிய ராதாபாரதி, வைகாசிப் பொறந்தாச்சு படத்தின் மூலம் பிரஷாந்தை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர்.
திறந்திடு சீசே படத்தை எம்.நிமேஷ்வர்ஷன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கி உள்ளார். இவர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்தவர் என்று விளம்பரம் செய்யப்பட்டது. அதைப் பார்த்த டைரக்டர் ஷங்கர் டென்ஷனாகிவிட்டார். நமக்கு சம்மந்தமில்லாத யாரோ நம் பெயரை பயன்படுத்துவதா என கடுப்பாகி, திறந்திடு சீஷே பட இயக்குநர் பற்றி விசாரிக்கச் சொல்லி இருக்கிறார். அவர் எந்திரன் படத்தில், சயின்ஸ் லேப் தொடர்பான காட்சிகள் எடுக்கப்பட்ட ஷெட்யூலில் ஷங்கரிடம் அஸிஸ்டெண்ட் டைரக்டராக பத்து நாட்கள் மட்டும் பணியாற்றியவராம். இந்த தகவல் சொல்லப்பட்டதும் அமைதியாகிவிட்டார் ஷங்கர்.