தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சின்னத்திரையில் பிரபலமாக இருந்து வந்த சிவகார்த்திகேயனை, '3' படத்தின் மூலம் வௌ்ளித்திரைக்கு கொண்டு வந்தார் தனுஷ். ஆனால் அதற்கு முன்பாகவே பாண்டிராஜின் மெரினா படம் ரிலீஸாகிவிட்டது. ஆனாலும் தனுஷூடனான அவரது நட்பு வளர்ந்து கொண்டே போனது. சிவகார்த்திகேயனை வைத்து எதிர்நீச்சல், காக்கிசட்டை படங்களை தயாரித்தார் தனுஷ். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனுக்கும், தனுஷூக்கும் சண்டை என அதிகமாகவே செய்திகள் கிளம்பின. ஒரு கட்டத்தில் இருவருமே அப்படியெல்லாம் எதுவுமில்லை, நாங்கள் நல்ல நண்பர்கள்தான் என்று சொல்லுமளவிற்கு ஆகிப் போனது.
இந்நிலையில் தற்போது தனுஷ் மாரி படத்தில் நடித்து முடித்துள்ளார். அதேப்போல் சிவகார்த்திகேயன், ரஜினி முருகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களின் இசை வௌியீட்டு விழாவும் வருகிற ஜூன் 7ம் தேதி ஒரேநாளில் ரிலீஸாக போவதாக செய்திகள் வௌியிட்டிருந்தோம். இப்போதும் படமும் ஒரேநாளில் ரிலீஸாக போவதாக தகவல் வௌியாகியுள்ளது. இருவரது படங்களும் ஜூலை 17ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு எடுத்திருக்கிறார்களாம். இதனால் முதன்முறையாக தனுஷூம், சிவகார்த்திகேயனும் நேரடியாக மோதும் சூழல் உருவாகியுள்ளது.