ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டார். சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்றதால் முதல்வர் பதவியிலிருந்து விலகினார் ஜெயலலிதா. இதனையடுத்து முதல்வர் பொறுப்பை ஓ.பன்னீர் செல்வம் ஏற்றார். இந்நிலையில், சமீபத்திலிருந்து சொத்து குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார், அதுமட்டுமின்றி அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்க எந்த தடையும் இல்லை என கோர்ட் தீர்ப்பளித்தது.
முதல்வராக இருந்த பன்னீர் செல்வம் நேற்று தனது பதவியை ராஜினமா செய்தார். ஜெயலலிதாவை முதல்வராக்க அதிமுக கூட்டத்தில் ஒருமனதமாக முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த 217 நாட்களாக வீட்டிலேயே இருந்த ஜெயலலிதா நேற்று தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்தார். அவருக்கு வழி நெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து இன்று முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றார் ஜெயலலிதா. அவருடன் சேர்ந்து 28 அமைச்சர்களும் பொறுப்பேற்று கொண்டனர். சென்னை பல்கலை., நூற்றாண்டு விழா மண்டபத்தில் இந்த விழா சிறப்பாக நடந்தது.
இந்த விழாவில் அரசியல் பிரமுகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் இந்த விழாவில் கலந்து கொண்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது. ரஜினி மட்டுமின்றி, இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர் சங்க தலைவர் சரத்குமார், இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன், மூத்த இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், நடிகை எம்.என்.ராஜன், பிரபு, ஏவிஎம் சரவணன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.