மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
வெளிவருதற்கு முன்பே தேசிய விருது பெற்ற படம் குற்றம் கடிதல். அதனை இயக்கி இருப்பவர் பிரம்மா. கல்லூரி நாட்களிருந்தே நாடகத்தில் ஈடுபாடு கொண்ட பிரம்மா. படித்து முடித்து விட்டு தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகத்தில் பணியாற்றினார். எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பாக பல நாடகங்களை நடத்தினார். குறும்படங்கள் இயக்கினார். அந்த அனுபவத்தின் அடிப்படையில் நண்பர்களுடன் இணைந்து குற்றம் கடிதல் படத்தை இயக்கினார். அது தேசிய விருது வரைக்கும் வந்துவிட்டது. அடுத்து அவர் பெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுக்கும் முடிவில் இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: குற்றம் கடிதல் ஒரு கமர்ஷியல் படமாகத்தான் எடுக்கப்பட்டது. தியேட்டர்களில் திரையிட்டு நாலு காசு பார்த்து தயாரிப்பாளருக்கு லாபம் கொடுக்க வேண்டும் என்றுதான் அந்தப் படத்தை இயக்கினேன். படத்தை வாங்கிய ஜேஎஸ்கே சதீஷ்குமார்தான் இது விருதுக்குரிய படம் என்று பல படவிழாக்களுக்கு எடுத்துச் சென்று தேசிய விருது வரைக்கும் கொண்டு வந்தார்.
ஒரு சம்பவம் நடக்கிறது. அந்த சம்பவம் அதில் சம்பந்தப்பட்ட நான்கு பேரை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பதுதான் படத்தின் கதை. எல்லோருமே புதுமுகங்கள்தான் நடித்துள்ளார்கள். இந்த படத்துக்கு நிறைய விருதுகள் கிடைத்தாலும் நான் விருதுக்காக படம் இயக்கவில்லை. எனது அடுத்த படம் பெரிய ஹீரோ நடிக்கும் படமாக இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் பெரிய ஹீரோக்கள் மூலம் சொல்லும்போது அதன் ரீச் இன்னும் அதிகமாக இருக்கும். பெரிய ஹீரோக்களிடம் கதை சொல்லி அவர்களுக்கு நம்பிக்கை வரவைக்க வேண்டும். அதை செய்ய என்னால் முடியும் என்று நம்புகிறேன் என்கிறார் பிரம்மா.