இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழ் சினிமாவின் நடன சூறாவளியாக வலம் வந்து கொண்டிருந்தவர் பிரபுதேவா. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் டைரக்டராகி விட்டார். அந்த வகையில், விஜய் நடித்த போக்கிரி, வில்லு படங்களை இயக்கியவர் பின்னர் ஜெயம்ரவி நடித்த எங்கேயும் காதல், விஷால் நடித்த வெடி ஆகிய படங்களையும் இயக்கினர். பின்னர் இந்திக்கு சென்று விட்டார். இதில், வில்லு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்தார். அப்போதுதான் பிரபுதேவா-நயன்தாராவுக்கிடையே காதல் ஏற்பட்டது. அதையடுத்து திருமணம் செய்து கொள்வதற்கான ஆயத்த வேலைகளிலும் இறங்கினர். ஆனால், நயன்தாரா கழுத்தில் தாலி ஏறும் கடைசிநேரத்தில் அவர்களது உறவு விரிசல் விழுந்தது. அதனால் முதலில் சிம்புவை விட்டு பிரிந்தது போன்று பின்னர் பிரபுதேவாவை விட்டும் முழுவதுமாக பிரிந்தார் நயன்தாரா.
ஆனால், தனது முதல் காதலரான சிம்புவுடன் தற்போது இதுநம்ம ஆளு படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கிறார் நயன்தாரா. இந்தநிலையில், தற்போது ஏ.எல்.விஜய் இயக்கும் படத்தில் பிரபுதேவா நடிக்க தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில், பிரபுதேவாவுடன் நடிக்க வாய்ப்பு வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா? என்று நயன்தாராவிடம் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் அந்த கேள்வியைக்கேட்டதுமே செம காண்டாகி விட்டாராம் நயன்தாரா. அதோடு, சிம்புவைகூட மன்னிப்பேன். ஆனால் பிரபுதேவாவை மன்னிக்கவே மாட்டேன் என்று ஆவேசமாக கூறினாராம்.
ஆனால் அதைக்கேட்டவர்கள், முதலில் இப்படித்தான் சிம்புவைப்பற்றி பேசும்போதும் எகிறினார் நயன்தாரா. இப்போது அவருடனேயே கூலாக டூயட் பாடியுள்ளார். இதேநிலை பிரபுதேவா விசயத்திலும் நடக்க நிறைய வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.