ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கஞ்சா கருப்பு, மகேஷ், ஆருஷி, ரகசியா உள்பட பலர் நடித்த படம் வேல்முருகன் போர்வெல்ஸ். இந்த படத்தை மலையன் கோபி இயக்கியிருந்தார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்தார். தருண்காந்த் பிலிம் பேக்டரி தயாரித்த இந்த படத்தை மலையன் கோபியும், கஞ்சா கருப்புவும் இணைந்து தயாரித்தனர். ஆனால் படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. இதையடுத்து, தன்னிடம் வாங்கிய 30 லட்சம் ரூபாயை மலையன் கோபி திருப்பித்தரவில்லை என்று அவர் மீது சிவகங்கை போலீசில் புகார் செய்திருக்கிறார் கஞ்சா கருப்பு. ஆனால், இதுவரை மலையன் கோபியை தொடர்பு கொள்ளவே முடியவில்லையாம்.
இதுபற்றி கஞ்சா கருப்பு கூறுகையில், எனக்கு ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது. ஆனால் டைரக்டர் எம்.பி.கோபி வேல்முருகன் போர்வெல்ஸ் கதையை என்னிடம் சொல்லி, கதையின் நாயகனாக நடிக்க வற்புறுத்தினார். அதோடு, இந்த படத்தை தயாரிக்க ஒரு 30 லட்சம் மட்டும் கொடுங்கள் படம் விற்றதும் திருப்பித்தந்து விடுகிறேன் என்று கூறினார். அதை நம்பி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எனது சொத்து பத்திரத்தை வைத்து 30 லட்சம் ரூபாய் வாங்கிக்கொடுத்தேன். ஆனால், அவரோ, படம் வெளியான பிறகும் என்னிடம் வாங்கிய பணத்தை திருப்பித்தரவில்லை. அதனால் நான் சிவகங்கை போலீசில் புகார் செய்தேன். அதன்பிறகு, அவரை அழைத்து பேச வேண்டும் என்று போலீசார் தொடர்பு கொண்டால், அவரது போன் சுவிட் ஆபில் உள்ளது. அவர் எங்கே இருக்கிறார் என்பதும் தெரியவில்லை.
மேலும், நான் போலீசில் புகார் செய்திருக்கிற செய்தி மீடியாக்களில் பரபரப்பாக வெளியாகிக்கொண்டிருப்பதால், இப்போது அவர் தலைமறைவாகி விட்டார். அதனால் அவரை கண்டுபிடித்து போலீஸ்வசம் ஒப்படைக்க வேண்டும் என்பதற்காக, நாளை நான் சென்னைக்கு வருகிறேன் என்று நேற்றைய தினம் சிவகங்கையில் இருந்து போனில் இந்த தகவலை தெரிவித்தார் கஞ்சாகருப்பு.